Friday, March 13, 2009

சின்ன சின்னதாய்...!!

வளர்தலும் தேய்தலுமாய்

வலம்வரும் என் நிலவே

அப்பழக்கத்தை ஏன் காதலிடம் கடன் கொடுத்தாய் ??

தவிப்பது நான் அல்லவா ??


-----

பிறை ..
அழகானாலும் ...
முழு நிலவின் குறையாகத்தான்
எனக்கு தெரிகிறது ...
நீ என் கண்ணில் பட்ட பின் ..!!

-----

முன்பெல்லாம் கதறிய
என் கண்ணாடி ...
இப்போது கவிஞன் என்கிறது
என்னை பார்த்து ..
உன்னால்...!!

-----

உன்னை கண்டு தான்
பழமொழிகளை நம்ப கூடாதென்று தீர்மானித்தேன்.
" அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம் " மூடர்கள் !!

-----

சித்திரை பிறந்ததும்
செந்தமிழ் மலர்ந்ததாம் ..
என் நித்திரை தொலைந்ததே
உன் செவ்விதழ் மலர்ந்ததும் ..

-----

கனவுகள் நிச்சியமன்று கண்மணியே ..
உன் நினைவுகள்தான் நிஜம் என்றும்.. நல்கனியே ..
உந்தன் கண்களுக்குள் கண்ணுறங்கா
கல்லறைக்கு செல்லேனடி ...!!

3 comments:

Unknown said...

beautiful!

adhi said...

super maapilai....awesome da....keep continuing the wonderful job da..

Anbarasu M said...

thanks da...