Friday, March 13, 2009

சின்ன சின்னதாய்...!!

வளர்தலும் தேய்தலுமாய்

வலம்வரும் என் நிலவே

அப்பழக்கத்தை ஏன் காதலிடம் கடன் கொடுத்தாய் ??

தவிப்பது நான் அல்லவா ??


-----

பிறை ..
அழகானாலும் ...
முழு நிலவின் குறையாகத்தான்
எனக்கு தெரிகிறது ...
நீ என் கண்ணில் பட்ட பின் ..!!

-----

முன்பெல்லாம் கதறிய
என் கண்ணாடி ...
இப்போது கவிஞன் என்கிறது
என்னை பார்த்து ..
உன்னால்...!!

-----

உன்னை கண்டு தான்
பழமொழிகளை நம்ப கூடாதென்று தீர்மானித்தேன்.
" அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம் " மூடர்கள் !!

-----

சித்திரை பிறந்ததும்
செந்தமிழ் மலர்ந்ததாம் ..
என் நித்திரை தொலைந்ததே
உன் செவ்விதழ் மலர்ந்ததும் ..

-----

கனவுகள் நிச்சியமன்று கண்மணியே ..
உன் நினைவுகள்தான் நிஜம் என்றும்.. நல்கனியே ..
உந்தன் கண்களுக்குள் கண்ணுறங்கா
கல்லறைக்கு செல்லேனடி ...!!

Saturday, February 21, 2009

என்னுயிரே...

மெல்லாடை உடுத்திய முழுமேகமும்

கரைந்தூற்றும் .. உன்எழில் கண்டு..

நட்சத்திர நீர் துளியாய் ...!


மாசில்லா அம்மழை சாரலும்

பாய்ந்தோடும்.. உன்மேனி தூய்மை கண்டு..

நலம் தரும் நதியாய் ...!


இதமான வெப்பமுடன் உலவும் அந்நீர் பரப்பும்

உறைந்தெழும்பும்.. உன்மென் மனம் கண்டு..

வெண் பனி பாறையாய் ...!


உருவாகிய உறைபனியும் கழன்றுடைந்து

கரைந்தே போகும்.. உன்துயரம் கண்டு..

சப்தம் மங்கிய சமுத்திரமாய் ...!


அப்பெருங்கடலும் வெப்பமுற்று கொதிந்து

நீராவியாய் மேலேறும் .. உன்கோபச் சூட்டில்..

தன்மை தாழ்ந்த முகிலாய் ...!

Thursday, February 5, 2009

நீயும் நானும் ...

நீயும் நானும் நேசிக்கையில்

நாகரீகமும் நசிங்கிடுமே ...


உனது கண்கள் பார்த்த கணம் முதலே

கல்லறை போக தோணுதடி ...

நீ நாணும் நாட்களிலே

எனது நகம் கூட கூசிடுமே ...

என்உடல் சிலிர்க்கும் உன் சினுங்களிலே

கண்டெடுத்தேன், சிற்பமும் அசை பொருளே ...

உன் அழகை பற்றி பாடுகையில்

வியந்தே போகும் என் மொழியே ...

எனது கண்ணீர் சிந்தும் பொழுதினிலே

உன் கரத்தால் அதை நீ கரைத்திடுவாய் ...

எனது வலிமையை எனக்கே வலியுறுத்தி

என்னை நீ வளர செய்தாய் ...

நான் தவறு செய்த தருணங்களில்

வாள்நட்சத்திரம் போல் வலம் வருமே

உனது மென் கோபம் என் மீதே ...


நாம் சண்டையாடி சேரும்பின்னே

வாய் வார்த்தைகள் யாவும் மறந்திடுமே ...

நாம் அழுத நிமிடங்கள்

அனைத்தும் அந்தரத்தில் மறைந்திடுமே ...

நீ வலியால் படும் வேதனையிலே

எனது கருவே கலைந்து போய்விடுமே ...


பெண்ணே ...

நீயும் நானும் நேசிக்கையில்

நாகரீகமும் நசிங்கிடுமே ...!!!