Wednesday, January 5, 2011

மனிதம் இயற்கை வரமாம் !!

காதல் ..

ஆயிரம் அழகு அற்புத உறவு

ஒருவனுக்கு ஒருத்தி நாகரீகம் பிறந்தது

சன்னமாய் சண்டை பிரிவின் உருக்கம்

முத்த சமாதானம் சேர்ந்தபின் சொர்க்கம்

புணரும் இனிமை காமம் கலவை

கல்யாண கனவு பேரின்ப வலி

இறுதி உறுதி அது கல்லறை உறக்கம்

முடிவை திருத்த யாரால் முடியும் ???

மனிதம் இயற்கை வரமாம்

தவறாம் என் சுயம் வரம் !!!

கவி பிழை !!!

கற்பனை வேண்டும் கர்வமும் வேண்டும்

சித்தரிக்க படுபவை சிறப்பாய் வேண்டும்

மொழி இலக்கணம் மாறா வேண்டும்

மதி இலக்கணமும் மங்காது வேண்டும்

காதல் வேண்டும் காமம் வேண்டும்

விசரம் இல்லா விளக்கமும் வேண்டும்

பொய்யும் வேண்டும் மெய்யும் வேண்டும்

அழகு வேண்டும் அழுத்தமும் வேண்டும்

அடுத்து அடுத்து அடுக்கு தொடர் வேண்டும்

எதுகை ஏற்றியும் மோனை முல்கியும்

சோர்வில்லா சொல் நடை வேண்டும்

இவையனைத்தும் அணைத்து ஓர் கவி எழுத முனைந்தேன் ..

என் எண்ணம் முடங்கியதால் பிழையாய் முடித்தேன் … !!!

இது கவிதையும் இல்லை கிறுக்கலும் இல்லை

படிக்காதீர்கள் !!

நான் கவியும் இல்லை கலைஞனும் இல்லை

நம்பாதீர்கள் !!

எனக்கு காதலும் இல்லை கடவுளும் இல்லை

பழிக்காதீர்கள் !!

இது உண்மையும் இல்லை பொய்யும் இல்லை

குழம்பாதிருங்கள் !!!

உன் பாதம் தழுவேன் … அம்மா

இம்மையில் பிறக்கும் முன்

உனக்குள் பிறந்தேன்

கருவறைக்குள் காத்திருந்த காலமெல்லாம்

கருணை இல்லாமல் உதைத்தவன் நான்

உன் குருதியில் மிதந்தவன் நான்

வெண் குருதியை குடித்தவனும் நான்

பசியுற்ற போது பயந்த என்னை

மடியினில் ஆற்றி பாசத்தை ஊற்றி

என் அழுகையை அமைத்தவள் நீ

என் அழகுக்கு ஆரம்பமும் நீ

எனது மலத்தை மாளாமல் கழுவி

எச்சிலை சலிக்காமல் சுவைத்து

குரல் வளம் கற்பிக்க தொடங்கி

நல்லவை நாற்பதையும் திணித்து

ஒழுக்கம் ஓம்ப வளர்த்தவள் நீ

உனக்கு மாறாக நான் என்ன செய்ய ??

மறுமைக்கு போகும் முன்

உன்பாதம் தழுவேன்அம்மா