Saturday, February 21, 2009

என்னுயிரே...

மெல்லாடை உடுத்திய முழுமேகமும்

கரைந்தூற்றும் .. உன்எழில் கண்டு..

நட்சத்திர நீர் துளியாய் ...!


மாசில்லா அம்மழை சாரலும்

பாய்ந்தோடும்.. உன்மேனி தூய்மை கண்டு..

நலம் தரும் நதியாய் ...!


இதமான வெப்பமுடன் உலவும் அந்நீர் பரப்பும்

உறைந்தெழும்பும்.. உன்மென் மனம் கண்டு..

வெண் பனி பாறையாய் ...!


உருவாகிய உறைபனியும் கழன்றுடைந்து

கரைந்தே போகும்.. உன்துயரம் கண்டு..

சப்தம் மங்கிய சமுத்திரமாய் ...!


அப்பெருங்கடலும் வெப்பமுற்று கொதிந்து

நீராவியாய் மேலேறும் .. உன்கோபச் சூட்டில்..

தன்மை தாழ்ந்த முகிலாய் ...!

No comments: