Thursday, February 5, 2009

நீயும் நானும் ...

நீயும் நானும் நேசிக்கையில்

நாகரீகமும் நசிங்கிடுமே ...


உனது கண்கள் பார்த்த கணம் முதலே

கல்லறை போக தோணுதடி ...

நீ நாணும் நாட்களிலே

எனது நகம் கூட கூசிடுமே ...

என்உடல் சிலிர்க்கும் உன் சினுங்களிலே

கண்டெடுத்தேன், சிற்பமும் அசை பொருளே ...

உன் அழகை பற்றி பாடுகையில்

வியந்தே போகும் என் மொழியே ...

எனது கண்ணீர் சிந்தும் பொழுதினிலே

உன் கரத்தால் அதை நீ கரைத்திடுவாய் ...

எனது வலிமையை எனக்கே வலியுறுத்தி

என்னை நீ வளர செய்தாய் ...

நான் தவறு செய்த தருணங்களில்

வாள்நட்சத்திரம் போல் வலம் வருமே

உனது மென் கோபம் என் மீதே ...


நாம் சண்டையாடி சேரும்பின்னே

வாய் வார்த்தைகள் யாவும் மறந்திடுமே ...

நாம் அழுத நிமிடங்கள்

அனைத்தும் அந்தரத்தில் மறைந்திடுமே ...

நீ வலியால் படும் வேதனையிலே

எனது கருவே கலைந்து போய்விடுமே ...


பெண்ணே ...

நீயும் நானும் நேசிக்கையில்

நாகரீகமும் நசிங்கிடுமே ...!!!

No comments: