Wednesday, January 5, 2011

கவி பிழை !!!

கற்பனை வேண்டும் கர்வமும் வேண்டும்

சித்தரிக்க படுபவை சிறப்பாய் வேண்டும்

மொழி இலக்கணம் மாறா வேண்டும்

மதி இலக்கணமும் மங்காது வேண்டும்

காதல் வேண்டும் காமம் வேண்டும்

விசரம் இல்லா விளக்கமும் வேண்டும்

பொய்யும் வேண்டும் மெய்யும் வேண்டும்

அழகு வேண்டும் அழுத்தமும் வேண்டும்

அடுத்து அடுத்து அடுக்கு தொடர் வேண்டும்

எதுகை ஏற்றியும் மோனை முல்கியும்

சோர்வில்லா சொல் நடை வேண்டும்

இவையனைத்தும் அணைத்து ஓர் கவி எழுத முனைந்தேன் ..

என் எண்ணம் முடங்கியதால் பிழையாய் முடித்தேன் … !!!

No comments: